Thursday, April 18, 2013

ஆஹா ......

ஒரு ஆல்பத்தை சென்ற வாரம் முழுவதும் வீட்டில் தேடிக்கொண்டிருந்தேன். அந்த ஆல்பத்துடன் சேர்ந்து ஒரு டைரியும் கிடைத்தது. அதை பார்த்தபோது, நானே மறந்து போன என்னுடைய சில ரசனைகளை
நியாபகப்படுத்தியது. ராயவரத்தில் டிப்ளோமா படிக்கும் போது, போட்டோ
எடுத்து அந்த போட்டோவுக்கு தகுந்த படத்தின் பெயர்களை கட் பண்ணி அந்த போட்டோவுடன் ஆல்பத்தில் வைப்பதுதான்  அது. கிட்டத்தட்ட அந்த பழக்கத்தை நான் மறந்தே போய்விட்டேன். எடுத்து பார்த்த போது  எனக்கே ஆச்சரியமாக  இருந்தது. அந்த ரசனையை தொடர்ந்திருந்தால் இந்நேரம் எவ்வளவு படம் கையில் இருந்திருக்கும்?..  எப்படியோ என்னுள் ஆரம்பித்து எனக்கே தெரியாமல் மறந்து போன அந்த ரசனை இன்று உயிர்பெற்றிருக்கிறது



அதே போல், டைரியில் அப்போது பார்த்த படங்களின் விமர்சனத்தை எழுதி பக்கத்தில் அந்த படத்தின் விளம்பரத்தை கட் செய்து ஒட்டியிருக்கிறேன். இப்படி ஒரு பொழுது போக்கு இருந்ததே இந்த டைரியை பார்த்தவுடன்தான் நினைவுக்கு வருகிறது. எப்படியெல்லாம் பொழுதை போக்கியிருகிறேன் என்று லேசாக வருத்தம் இருந்தாலும், அந்த சுகம் இனி கிடைக்கப்போவதில்லை என்ற ஏக்கமும்  இருக்கிறது.

Saturday, February 09, 2013

நான் வாங்கிய பல்ப்

சென்ற ஆண்டு ஜனவரி மாதம் ஒரு விஷேசத்திற்காக CFL bulb ஒன்று வாங்கினேன். 200 ருபாய்க்கு 23 வாட்ஸ் விப்ரோ  bulb  கம்மனஹல்லியில் [Kammanahalli] உள்ள H.M.Tradersல் வாங்கினேன். கடைகாரர் அந்த பல்பின் அடி பகுதியில் தன் கடையின் ரப்பர் ஸ்டாம்ப் சீல் வைத்து அன்றைய தேதியையும் [18/01/2012] எழுதிக்கொடுத்தார். ஒரு வருடத்திற்குள் ஏதேனும் பிரச்சனை என்றால் மாற்றி தருவதாகவும் சொன்னார். வாங்கிய பல்ப்ஐ அந்த   இரண்டு நாள் விஷேசத்திற்கு மட்டும் பயன்படுத்தி விட்டு பல்ப்  வந்த அட்டை
பெட்டியிலேயே போட்டு எடுத்து வைத்துவிட்டேன். ஆறு மாதத்திற்கு பிறகு ஒரு முறை எடுத்து போட்ட போது  அது எரியவில்லை. சரி கடையில் கொடுத்து மாத்தி விடலாம் என்று எடுத்து வைத்துவிட்டேன்.
அதன் பிறகு பலமுறை அந்த கடைக்கு சென்ற போதும் இதை எடுத்து செல்ல மறந்துவிட்டேன். சென்ற செப்டம்பர் மாதம் வீடு மாறும் போது இந்த பல்ப்ஐ பார்த்தேன். அடடா இத்தனை முறை சென்றோம் ஒரு முறை கூட  மாற்றவில்லையே என்று தோன்றியது. பின்னர் புது வீட்டிற்கு வந்து சாமான்களை அடுக்கி வைக்கும் போது இந்த பல்பை சீக்கிரம் மாற்ற வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். சென்ற மாதம் பொங்கலுக்காக  வீட்டை சுத்தம் செய்யும் போது இந்த பல்ப் மீண்டும் என் கண்ணில் பட்டது. அதில் உள்ள தேதியை பார்த்தேன், ஒரு வருடம் முடிவதற்கு இன்னும் ஒரு வாரம் தான் இருந்தது. இன்றைக்கு அல்லது நாளைக்கு போய் உடனே மாற்றவேண்டும் என்று  வழக்கம்போல் நினைத்துகொண்டேன். நினைத்தேனே ஒழிய செல்ல முடியவில்லை. அன்றைக்கு காலையில் எழுந்து காலெண்டரை பார்த்தேன். அன்றைய தேதி 18.1.2013 என்று காட்டியது. சரியாக ஒரு வருடம் ஆகிவிட்டது.

H.M.Tradersல் நான் பல பொருட்கள் வாங்கியிருக்கிறேன், முதலாளியோடு நல்ல பரிட்சயம் உண்டு. மற்ற கடைகளில் ஒரு நாள் தாண்டிவிட்டால் கூட மாற்ற மாட்டார்கள் ஆனால் H.M.Tradersஇல் ஒரு வாரம் ஆனால் கூட பரவாயில்லை கொண்டுவாங்க சார் மாத்திக்கிறேன் என்றார். ரொம்ப நல்லவர். சரி ஒரு வாரம் இருக்கிறதே என்று இருந்து அது இரண்டு வாரம் ஆகிவிட்டது. என் வீட்டில் நாளைக்கு officeல் இருந்து வரும்போது டைம் இருந்தா H.M.Traders போய் ஒரு குழிப்பணியாற சட்டி வாங்கிட்டு வாங்க என்றார். நாளை போகும் போது குழிப்பணியாற சட்டியை வாங்கிகொண்டு இந்த பல்ப்ஐ மாற்றி விட வேண்டும் என்று நினைத்ததோடு  மட்டுமல்லாமல்  என் நியாபகசக்தியின் மீதுள்ள அபார நம்பிக்கையால் அப்பொழுதே அந்த பல்ப்ஐ எடுத்து என் ஆபீஸ் bag  அருகே வைத்துவிட்டேன்.
மறு நாள் காலை வேலைக்கு வேகமாக கிளம்பும் போது, என் bagல் laptop, லஞ்ச் பாக்ஸ் எல்லாம் எடுத்து வைத்து விட்டு மேலாக இந்த பல்பை வைக்க எடுத்தேன். எடுக்கும் போது  அட்டை பெட்டி கீழாக திறந்து கொள்ள, பல்ப் கீழே விழுந்து தெறித்துவிட்டது. H.M.Traders முதலாளி எவ்வளவுதான் நல்லவராக இருந்தாலும் உடைந்த பல்ப்ஐ வாங்கும் அளவுக்கு நல்லவர் இல்லை. கொடுக்கும் அளவுக்கு நானும் கெட்டவன் இல்லை. வாங்கி ஆறு மாதத்திற்கு  உபயோகபடுத்தாமல் இருந்தேன். பின்னர் ஆறு மாததிற்கு ரிப்பேர் ஆகிவிட்டது என்று தெரிந்தும் மாற்றாமல் இருந்தேன். கடைசியில் உடைத்தும் விட்டேன் [அது உடையவில்லை நான் உடைத்துவிட்டேனாம் :(  ]

இதுவரை பெரிய பல்ப் ஏதும் வாங்காமல் இருந்தாலும், வாங்கிய பல்ப்களிலேயே இதுதான் பெரிய பல்ப் என்று நினைக்கிறன்.

Direction: Click here for more post.
KEYWORDS: BULB, பல்ப்

Thursday, October 13, 2011

Waiting for Diwali leave approval

Monday, April 26, 2010

மைக்ரோ விமர்சனம்

தீராத விளையாட்டு பிள்ளை: நான் அவன் இல்லை படத்தின் சாயல் சில இடங்களில் இருந்தாலும் வித்தியாசமான படம். டயலாக் டெலிவரி மற்றும் வாய்ஸ் மாடுலேஷுன்னில் விஷால் நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார். வழக்கம்போல் பிரகாஷ்ராஜ் ஆரம்பத்தில் சிரிக்கவைத்து பின்னர் பயமூர்த்துகிறார். மொத்தத்தில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் நம் செல்ல பிள்ளை.

தமிழ் படம்: லொள்ளு சபாவில் அரைமணி நேர எபிசோடாக வர வேண்டிய கான்செப்ட்ஐ முழுநீள படமாக எடுத்திருக்கிறார்கள். சீனுக்கு சீன் பல ஹீரோக்களை கேலி செய்து நம்மை ரசிக்க வைக்கிறார்கள். ஓ மகஸீயா பாடல் கலக்கல் ர(ரா)கம். சைக்கிள் சக்கரம் சுற்றும் போது ஹீரோ பெரியாலாவது, ஒரே பாடலில் ஹீரோ பணக்காரன் ஆவது என அணைத்து தமிழ் சினிமாதனத்தையும் கலாய்த்திருக்கும் இந்த படம் ஒரு நல்ல டைம் பாஸ்.

கச்சேரி ஆரம்பம்: இன்னொரு தமிழ் படம்.

குட்டி: செம்ம போர்.

வேட்டைக்காரன்: வழக்கம் போல் பாடல்கள் சூப்பர், சண்டை சூப்பர், பஞ்ச் டயலாக் சூப்பர், ஹீரோ யின் சூப்பரோ சூப்பர். சற்றே காமெடியிலும், கதையிலும் கவனம் செலுத்தியிருந்தால் படமும் சூப்பராக இருந்திருக்கும்.

Friday, January 08, 2010

வைகோ - நான் - போட்டோகிராபர்

கல்லூரி நாட்களை லேசாக நினைத்தால் கூட பலநூறு சுவாரஸ்யமான நிகழ்வுகள் முண்டியடித்துக்கொண்டு வந்து விழுகிறது. அதற்கு சாட்சியாய் சில புகைப்படங்களும்கூட. பூமியும் மனிதனின் மனமும் ஒன்று என்பது என் கருத்து. பூமிக்குள் புதைந்து கிடக்கும் பலப்பல ரகசியங்களைப்போல் மனதிலும் பலப்பல அழகிய நிகழ்வுகள் நவரசமாய் விரிந்து கிடக்கும்.இந்த நிகழ்வுகள் எப்போது வேண்டுமானாலும் யாரால் வேண்டுமானாலும் வெளிவரலாம். இந்த அழகான நிகழ்வுகள் நினைவில் தோன்றும்போது அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று உடன்னிருந்தால் அந்த நிமிடங்களை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும். என் கல்லூரி நாட்களில் அப்படி மறக்க முடியாத சம்பவங்கள் நிறையவே உண்டு. அப்படிப்பட்ட புகைப்படங்களில் சில கீழே. ஆனால் இந்த படங்களை மட்டும் பார்க்கும் போது அந்த நிகழ்ச்சியை காட்டிலும் அந்த படத்தை எடுத்த முகம் தெரியாத கேமராமேன் தான் நினைவில் வருவார், காரணம் கீழே

முதல் படம்: இது காலேஜ்ல நடந்த ஒரு கலை நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடியபோது எடுத்த படம். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் வைகோ. மேடைக்கு முன்னாள் உட்கார்ந்துகொண்டு எல்லா நிகழ்ச்சியையும் பார்த்துக்கொண்டிருந்தார். சரியாக ஏழு மணிக்கு எங்கள் டான்ஸ் ப்ரோக்ராம் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் இடையில் யாரோ ஒரு ஐடியா மணி, முதலில் எல்லா Girls ப்ரோக்ராம்மையும் வைத்துவிட்டால் அவர்கள் சீக்கிரம் வீட்டுக்கு போவார்கள் அதற்கு பின்னர் பாய்ஸ் ப்ரோக்ராம் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்ல அதன்படி ஒன்பது வரை contineousஆகா Girls ப்ரோக்ராம் அறங்கேற்றப்பட்டது. ஒன்பது ஐந்துக்கு வைகோ கிளம்பிவிட்டார். எங்களுக்கு ஒன்பது முப்பதுக்கு மேடையை கொடுத்தார்கள். சரி Girlsம் (வைகோவும்) இல்லாவிட்டாலும் பரவாயில்ல என்று மேடை ஏறி ஆடினோம். போட்டோகிராபருக்கு என் மேல் என்ன கோவமோ தெரியவில்லை. கிட்டத்தட்ட ஐந்து நிமிடம் ஆடியிருக்கிறேன், ஆனால் அவர் ஒரே ஒரு போட்டோ மட்டும் எடுத்திருக்கிறார் அதுவும் ஆடிய ஐந்து பேரில் சரியாக என்னை மட்டும் கவர் செய்யாமல். படத்தை யாராவது பார்க்கும் போதோ அல்லது நான் காட்டும் போதோ ரைட் சைடுல பின்னால ஆடுறது நான்தான் அப்படீன்னு நானே அவர்கள் கேட்பதற்கு முன்னால் சொல்லிவிடுவேன். என்னுடன் பழகியவர்கள் நம்பி சிரிப்பார்கள், புதியவர்கள் நம்பியது போல் சிரிப்பார்கள்.

இரண்டாவது படம்: ஸ்போர்ட்ஸ் டே அன்று எடுத்த படம் இது. பாட்மிட்டன் போட்டியில் வெற்றிபெற்றதர்காக நாங்கள் மேடை ஏறினோம். ம.தி.மு.க தலைவர் வைகோவும், சூப்பர்ன்டென்ட் ஆப் போலீஸ் ஆபாஷ் குமார் I.P.Sம் விழாவின் முக்கிய விருந்தினர்களாக வந்திருந்தார்கள். வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் வைகோ பரிசு வழங்கிக்கொண்டிருந்தார், எங்கள் பெயர் அடுத்த ஐந்து நிமிடத்தில் வரப்போகிறது என்று எங்களை அழைத்து மேடை அருகில் நிற்க சொன்னார்கள். சரியாக எங்கள் பெயர் வருவதற்கு முன்பு மேடையில் இருந்த ஒரு புரோபசர் புண்ணியவான், வைகோவை அமரும்படி கேட்டுக்கொண்டு அடுத்து வருபவர்களுக்கு ஆபாஷ் குமார் பரிசு வழங்குவார் என்று அறிவித்தார். அப்பொழுதெல்லாம் ஓரளவுக்கு வைகோவை தமிழகத்தின் இரண்டு பெரிய தலைவர்களுக்கான ஒரு மாற்று சக்தியாக மக்கள் பார்த்த காலம். அவரிடம் பரிசு வாங்குவதில் எனக்கும் ஒரு தனி சந்தோஷம் இருந்தது. அதை கெடுத்த அந்த புரோபசரை வாழ்த்திக்கொன்டிறுக்கும் போதே சக டீம் நண்பர்கள் மேடை ஏறி பரிசை தொட்டுக்கொண்டு போஸ் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள், சுதாரித்துக்கொண்ட நானும் மேடை ஏறி அவர்களோடு சேர்ந்துகொண்டேன். ஒரு வாரம் கழித்து, பரிசு வாங்கும் போட்டோ கைக்கு கிடைத்தது, பிரித்து பார்த்தேன், நான் நன்றாக தெரிந்தேன், ஆபாஷ் குமார் நன்றாக தெரிந்தார் ஆனால் வைகோவை காணோம். போட்டோகிராபர்ரின் திறமை அப்போதுதான் புரிந்தது, வைகோவை கவர் செய்யாமல் சரியாக எடுத்திருந்தார். வழக்கம்போல் இந்த படத்தை மற்றவர்களிடம் காட்டும் போதும், பின்னால கருப்பு துண்டு தெரியுதில்ல அதுதான் வைகோ அப்படின்னு நானேசொல்லிவிடுவதுண்டு.

மூன்றாவது படம்: இதுதான் எல்லாத்த விடவும் பெரிய ஹைலைட். நாலு வருஷம் படிப்பு முடிந்து அன்று காலேஜில் கான்வகேஷன் டே. சிறப்பு விருந்தினராக மீண்டும் அதே வைகோ. பொடாவில் கைதாகி சிறையிலிருந்த வைகோ, விடுதலையாகி கலந்துகொண்ட முதல் (அரசியல் சார) நிகழ்ச்சி என்பதால் பரபரபுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் இருந்தது. "இந்த கல்லூரி மேடையை எக்காரணத்தை கொண்டும் அரசியலுக்கு பயன்படுத்தமாட்டேன்.." என்று சொல்லி ஆரம்பித்த வைகோவின் உரையில் மாணவர்களும், பெற்றோர்களும் சொக்கிப் போனதென்னவோ உண்மை. பட்டமளிப்பு விழா ஆரம்பம் ஆனது, இந்த முறை எப்படியும் அவருடன் போட்டோ எடுத்துவிடவேண்டுமென நினைத்துக்கொண்டேன். வைகோவும், துணைவேந்தரும் மாறி மாறி ஒவ்வொரு மாணவருக்கும் பட்டத்தை கொடுத்துக்கொண்டிருந்தார்கள், வாங்கிய மாணவர்கள் இருவருக்கும் இடையே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டு கீழே இறங்கினார்கள். நானும் சென்றேன், பட்டத்தை வாங்கினேன், புகைப்படம் எடுத்தேன், இந்த முறை எப்படியும் போட்டோவில் வைகோவுடன் நாம் நன்றாக தெரிவோம் என்று எண்ணிக்கொண்டு கீழே இறங்கி வந்தேன். விழா முடிந்தவுடன் காலேஜ் ஆபீஸ்ல் இருந்து வந்த ப்யூன் ஒருவர் கான்வகேஷன் போட்டோ வேண்டுமென்பவர்கள் ரூ 100 செலுத்தி அட்ரஸ் கொடுத்துவிட்டு போனால், கொரியரில் போட்டோ அனு்பப்படும் என்று சொன்னார். முதல் ஆளாக நூறு ரூபாயும் அட்ரஸ்ம் கொடுத்துவிட்டு வந்தேன். அனுப்புகிறார்கள், அனுப்புகிறார்கள் ஆறு வருடமாகி இன்னமும் அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். "முதல்ல எல்லாம் காரணத்த சொல்லிட்டு அடிப்பானுங்க, ஒரு ஆறுதலா இருக்கும், இப்ப எல்லாம் காரணமே சொல்லாம அடிக்குரானுங்க" என்று வடிவேலு சொல்வது போல், முன்னாடி எல்லாம் எனாதானோனு எடுத்த போட்டோவயாவது காட்டுனானுங்க, ஒரு ஆறுதலா இருந்தது, இப்ப அதையும் காட்ட மாட்டேனுரானுங்க, நெனச்சாலே குறுகுறுன்னு இருக்கு. ஹும்ம்ம்.

KEYWORDS: P.S.R ENGINEERING COLLEGE, SIVAKASI, PSREC, SEVALPATTI.

Wednesday, December 16, 2009

ட்விட்டர் விமர்சனம்

பழசிராஜா: பில்ட் அப் கொடுத்த அளவுக்கு படத்தில் பிரம்மாண்டம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. லாங் ஷாட்டில் கூட மொத்தம் நூறு படை வீரர்களே தெரிகிறார்கள். Patriotism என்ற ஒரு உணர்வால் படம் தப்பிப் பிழைத்திருக்கிறது. சரத்குமார் இருந்திராவிட்டால் படம் ரொம்பவே போர் அடித்திருக்கும்.

சிவா மனசுல சக்தி: நல்ல ஒரு கலக்கலான படம். சிவா என்கிற அந்த லோக்கல் சென்னைவாசி கேரக்டருக்கு அப்படியே பொருந்துகிறார் ஜீவா. சந்தானத்தின் காமெடியும் யுவனின் இசையும் படத்திற்கு மிகப்பெரிய பக்கபலம். அனுயாவின் பிறந்தநாள் காட்சியோடு படத்தை முடித்திருக்க வேண்டும், தேவையில்லாமல் அதற்கு பிறகு ஒரு 10 நிமிடம் காட்சிகளை இழுத்து கடைசியில் கடுப்படித்துவிட்டார்கள். மற்றபடி சூப்பர்.

யோகி: அமீர் வேகமாக ஓடுகிறார், ஸ்டைல் ஆகா நடக்கிறார், நன்றாக ஆடுகிறார் அப்படியே கொஞ்சமாக நடிக்கிறார். நத்திங் ஸ்பெஷல் அபௌட் தி மூவி. ஜஸ்ட் ஒரு ரவுடியின் மறுப்பக்கம். அவ்வளவுதான்.

நான் அவன் இல்லை 2: அவனா நீ? முதல் பார்ட்டில் இந்தியாவில் நான்கு பெண்களை ஏமாற்றுவார், இது பார்ட் டூ அதனால் வெளிநாட்டில் நான்கு பெண்களை ஏமாற்றுகிறார். படம் முழுவதும் ஒரே கவர்ச்சி மழை. படத்தில் வரும் அணைத்து கேரக்டர்களும் சொல்லும் ஒரு வசனம் "ரொம்ப இன்டெலிஜென்ட் கிரிமினல் அவன்". பேசாம படத்துக்கு இதையே தலைப்பா கூட வைத்திருக்கலாம். கிளைமாக்ஸ் முடிந்தவுடன் வணக்கத்திற்கு பதில் சிம்பாலிக்காக ஒரு எச்சரிக்கை போட்டார்கள், அது வேற ஒன்னும் இல்ல நான் அவன் இல்லை பார்ட் த்ரீ வருமாம்.