Monday, May 12, 2008

போன்சாய் மிருகங்கள்


இந்த படத்தில் இருப்பது ஒரு அழகான கற்பனை. இது கற்பனையாக இருக்கும் வரை ரசிக்கலாம். இதுவே உண்மையாக நிகழ்ந்தால்? நிகழும். இப்பொழுது இல்லாவிட்டாலும் வரும் காலத்தில் இது நிகழும். ஒரு க்ளோனிங் சாத்தியப்படும் போது இது முடியாதா என்ன.

இனி வரும் காலத்தில் உயிர்களை படைக்கும் திறமை கடவுளிடம் மட்டுமே இருக்கப்போவதில்லை. அப்படியே இருந்தாலும், கடவுளால் படைக்கப்பட்ட இரண்டு உயிர்களை, உயிர்களின் குணாதிசியங்களை கொண்டு இன்னொரு உயிரை மனிதன் நிச்சயம் படைப்பான். சுமாராக 50 ஆண்டுகளுக்கு பிறகு இதுபோன்ற கோழியை பார்க்கலாம், பசுவின் உயரத்தில் நாயின் குணங்களுடன் யானையை பார்க்கலாம், வீட்டிலும் வளர்க்கலாம். போன்சாய் மரங்களைப்போல் போன்சாய் மிருகங்கள் என்று ஒரு பட்டியல் உருவாகும். கல்லூரிகளில் இதற்கென ஒரு படிப்பு வரும். இப்படி ஒரு நிலை வரும்போது 'நன்றி உள்ள நாய்' என்று அடையாளம் காட்டக்கூட ஒரு நாய் இருக்காது. அனைத்து உயிரினங்களும் தன் அடையாளத்தை இழந்து விசித்திரமாய் காட்சியளிக்கும். அப்போதும் இதை ரசிப்பதற்கென ஒரு கூட்டம் இருக்கும், எதிர்ப்பதற்கு ஒரு கூட்டம் இருக்கும். எதையும் கண்டுகொள்ளாமல் இன்னும் வேகமாய் விங்ஞானம் போய்க்கொண்டே இருக்கும்.

Sunday, May 11, 2008

தேவையா இந்த பில்ட்-அப்


டைரக்டர் தரணி எனக்கு 'குருவி'க்காகச் சொன்னது சின்ன அவுட் லைன். 'கில்லி'யில் என்னை பெரிய உயரத்துக்கு ஏத்திவிட்டவர்... உடனே சரின்னு சொல்லிட்டேன். சில கூட்டணி தப்பு பண்ணவே பண்ணாது. அதில் ஒண்ணு... விஜய் தரணி த்ரிஷா!'' -- த்ரிஷா Dec 2007.

ஒரு சில படங்களில் நடிக்கும்போது, அந்த படங்கள் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எனது உள்ளுணர்வு சொல்லும். படத்தின் வெற்றி குறித்து ஒரு நம்பிக்கை இருக்கும். அந்த நம்பிக்கை பெரும்பாலும் சரியாக அமையும். `குருவி' படத்திலும் அந்த நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. -- விஜய்

‘‘ட்ரிபிள் கில்லி எதிர்பார்க்கிறோம் தரணி!’’ என்று சொல்லித்தான் தரணியிடம் பேச்சுவார்த்தையே ஆரம்-பித்தார்களாம். ‘‘அசின், த்ரிஷா, ஸ்ரேயா என மூவருள் ஒருவரையோ அல்லது மூவரையுமேவோ கமிட் செய்து-கொள்ளுங்கள். ரஜினிக்கு ‘பாட்ஷா’ போல விஜய்க்கு இந்தப் படம் அமைய வேண்டும்!’’ என்று சொல்லியிருக்கிறார் உதயநிதி.
இந்த படம் வெளிவந்த பிறகு, அடுத்த இளையதளபதி யாருனு தான் எல்லோரும் பேசுவாங்க -- தரணி
இந்த படத்துக்காடா இவ்வளவு பில்ட்-அப் கொடுத்தீங்க?

Tuesday, May 06, 2008

நீயா? நானா? -- க்ளாசிக்கல் டாக் ஷோ

மெகா சீரியல்களில் சிக்கிக்கிடந்த மக்களை வெளியே கொண்டுவந்த பெருமை விஜய் டி.விக்கு உண்டு. சீரியல்களை குறைத்து டாக் ஷோக்களை அறிமுகப்படுத்தி இளைஞர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்துக்கொண்டது. காப்பி வித் அணு, லொள்ளு சபா, காதலிக்க நேரமில்லை, மதுரை, கனா காணும் காலங்கள், மதன்ஸ் திரைப்பார்வை, ஜோடி No 1 என்று பல அருமையான ப்ரோக்ராம் இருந்தாலும் எனக்கு ரொம்ப பிடித்தது நீயா? நானா? தான். இந்த நிகழ்ச்சியின் பெருமையே, எந்த டி.வியும் இது வரை காப்பி அடிக்காததுதான். காப்பி அடிக்க முடியாததுதான்.

இந்தளவு ஹிட் ஆனதிற்கு காரணம் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுப்பதும் அதன் anchor கோபிநாத்தும் தான். ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு, அதற்கு ஒரு அழகான விளக்கம் கொடுத்து, இருதரப்பையும் சுருக்கமாக அறிமுகப்படுத்திவிட்டு விவாதத்திற்குள் நுழைவதும், கண்ணா பின்னாவென்று பேசாமல், எடுத்துக்கொண்ட தலைப்பின் உட்பிரிவுகளை பற்றி நுணுக்கமாக பேசும்போது என்னையும் அறியாமல் ரசிக்க ஆரம்பித்துவிடுகிறேன். முடிவை சொல்லாமல் விடுவது பலருக்கு ஒரு குறையாகவே உள்ளது. முடிவை சொல்லுவதற்கு இது ஒன்றும் பட்டிமன்றம் அல்ல. இருதரப்பு கலந்துரையாடல்களை கேட்ட பின்பு நாமே ஒரு நிலைப்பாட்டை எடுதுக்கொள்ளவேண்டியதுதான். கோபிநாத்தும் வெறும் டாபிக் உடன் வராமல் கொஞ்சம் ஹோம் வொர்க் / ரிசர்ச் செய்திருக்கிறார் என்பது அவர் பேசுவதில் இருந்தே தெரிகிறது. ரொம்ப நல்லா பண்றிங்க கோபிநாத். எழுத்தாளர் சுஜாதாவை நீங்கள் பேட்டி எடுத்ததை பார்த்தேன், அதுவும் ரொம்ப நல்லா இருந்தது.


KEYWORDS: NEEYA NAANA GOPINATH, GOPINATH, NEEYA NAANA

Monday, May 05, 2008

அடுத்த உலக நாயகன்?

சூரியாவின் சமிபத்திய போட்டோக்களை பார்க்கும் போது, சம்பளத்தை மட்டும் கோடிகளில் வாங்கிவிட்டு எவ்வித உழைப்பும் இன்றி நடித்து புகழ் பெரும் காலம் மாறிவருகிறது என்று தான் தோன்றுகிறது. ஒரு படத்திற்கு ஒவ்வொருவரும் எவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என்பதை உன்னிப்பாக கவனிக்க தொடங்கிவிட்டார்கள். வெறும் முடியை மட்டும் நீளமாக வளர்த்தும், சிறிதாக வெட்டியும், தாடி வளர்த்தும் இனி ரசிகர்களை கவர முடியாது. கந்தசாமி படத்தில் விக்ரம்மும், அயன் படத்தில் சூரியாவின் உழைப்பும் நிச்சயம் பேசப்படும். அடுத்த சூப்பர் ஸ்டாருக்கு பலர் போட்டி போடும் வேலையில், இவர்கள் இருவர் மட்டுமே அடுத்த உலகநாயகனுக்கு போட்டி போடுகிறார்களோ என்று தோன்றுகிறது.


Saturday, May 03, 2008

குருவி விமர்சனம்


கல் குவாரியில் அடிமை தொழிலாளிகளாக சிக்கித்தவிக்கும் தன் அப்பாவையும் அவருடன் உள்ள மற்றவர்களையும் மீட்பதற்காக சுமன், ஆஷிஸ் வித்யாதிரி, 'கடப்ப' ராஜா, சூரி போன்ற வில்லன்களுடன் மோதும் கதைதான் குருவி. ஆரம்பத்தில் மாளவிகா, விவேக், பாடல் என்று அமர்களமாக ஆரம்பிக்கும் படம் போக போக படு போர். பல இடங்களில் அப்படியே கில்லியை நினைவு படுத்துகிறது காட்சிகள்.

ஒரு வெற்றிப்படம் கொடுத்த கூட்டணியினர் மீண்டும் இணையும் போது பழைய படத்தின் சாயல் கொஞ்சம் கூட இல்லாமல் தவிர்த்திருக்க வேண்டும். ஆனால் இங்க வலுக்கட்டாயமாக சேர்த்திருக்கிறார்கள். 80% படத்தில் கதை/காட்சியமைப்பு அப்படியே கில்லியை நினைவு படுத்துகிறது. அநியாயத்துக்கு செண்டிமெண்ட் பார்த்திருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு சில.....
  1. கில்லியில் கபடி ரேஸ் முடிந்து கோப்பை வாங்கியவுடன், கதை, திரைக்கதை இயக்கம் தரணி என்று பெயர் வரும். இதில் கபடிக்கு பதில் கார் ரேஸ் அவ்வளவுதான் வித்தியாசம்.
  2. இரண்டு படத்திலும் போட்டியில் ஜெயித்தவுடன் பாடல்.
  3. இதிலும் விஜயின் பெயர் வேலு. அதில் சரவனவேலு இதில் வெற்றிவேலு.
  4. 'அப்படி போடு' பாடலுக்கு பதில் 'மொல மொல' பாடல்.
  5. ஆடியோ casset வெளியிட்ட இடம் Little Flower ஸ்கூல்.
  6. படம் ரிலீஸ் ஆனா நாள் அதே சனிக்கிழமை.
  7. இரண்டு படத்திலும், இடைவேளைக்கு முன்பு த்ரிஷாவை இழுத்துக்கொண்டு ஓடுவது. அதை தொடர்ந்து வரும் chasing காட்சிகள்.

இடைவேளை வரை படத்தை காப்பாற்றும் விவேக் பின்பாதியில் ஒரு காட்சியில் கூட இல்லாமல் போனது மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட். கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்தும் படு கேவலம். விஜய் மாடியில் இருந்து குதித்து, கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் ரயில்வே track அருகில் landஆவது மிகப்பெரிய்ய அபத்தம். அதிலும் trainனின் வேகத்திற்கு ஓடுவது செம்ம காமெடி. எதை எடுத்தாலும் பார்ப்பார்கள் என்று எடுத்திருக்கிறார்கள். ஒரு லேப்டாப்ல் மொத ரகசியத்தையும் வைத்திருப்பது, அதன் password தெரியாமல் வில்லன்னும் விஜய்யும் முழிப்பது, e-mailலில் விஜய் அனைத்து ரகசியத்தையும் போலிசுக்கு அனுப்புவது, அங்கங்கே webcam வைத்திருப்பது போன்றே சீரியஸ் ஆனா காட்சிகள் கூட காட்சி அமைப்பால் காமெடி ஆகிப்போனது. வில்லன்கள் அனைவரும் காட்டு தனமாக கத்துகிறார்கள், இந்த நிலை எப்போதுதான் மாறுமோ. Realistic வில்லன்களை பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. என்னக்கு தெரிந்து 'கனா கண்டேன்' படத்தில் பிரிதிவிராஜ் வில்லன் ரோலில் அழகாக நடித்திருப்பார்.

தியேட்டரில் கேட்ட சில கமெண்ட்ஸ்...

  1. இத்தனை வில்லன்கள் இருந்தும் ஒருத்தன் கூட குருவி சுட கூட லாயக்கில்லை.
  2. இந்த படத்த Dhoni வேற பார்தானம், அதான் last மேட்ச் தோத்துட்டானுங்க.
  3. மச்சான் கன்ன மூடிக்க, விஜய் மேலிருந்து குதிக்க போறான், எங்க போய் land ஆகா போறான்னு தெரியல.
  4. விஜயகாந்த் படத்தையே முந்திட்டானுங்க.

என்னதான் விளம்பர படுத்தினாலும் படம் ஓடுவது ரொம்ப சிரமம். விவேக் மற்றும் பாடலுக்காக 40 நாள் ஓடினாலே பெரிய விஷயம். சீக்கிரமே கலைஞர் டி.வில படத்த பாக்கலாம்.

Thursday, May 01, 2008

குருவி பாடல்களின் visual internetல் வெளியாகியுள்ளது

குருவி படம் இன்னும் வெளியாகதா நிலையில், அந்த படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்களின் visual internetல் வெளியாகியுள்ளது. இங்கே பார்க்கலாம்.


Tuesday, April 22, 2008

ஆன்லைனில் இலவசமாக தமிழ்நாடு பாடப் புத்தகங்கள்

6 முதல் 14 வயதுடைய அனைவருக்கும் இலவச கல்வி, இலவச பாடப் புத்தகங்கள், சத்துணவு என்று கொடுத்து ஆரம்ப கல்வியை அனைவருக்கும் அளிக்கும் முயற்சியில் இருக்கும் தமிழக அரசு, அடுத்த கட்டமாக 1 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடப் புத்தகங்களையும் ஆன்லைனில் PDF வடிவில் இலவசமாக பதிவிறக்கம் செய்யும் படி கொடுத்திருப்பது மிகுந்த ஆச்சரியத்தையும் சந்தோசத்தையும் கொடுக்கிறது.


நான் திண்டுக்கல்லில் படித்த போது பாடப் புத்தகங்கள் கிடைக்காமல் அய்யனார் புக் ஸ்டோரிலும், கே.வி.நாராயண ஐயர் ஸ்டோரிலும் ஒரு வாரம் முன்பாக சொல்லிவைத்து வாங்கியதும், இதனால் வகுப்பறையில் திட்டு வாங்கியதும் நன்றாக நினைவு இருக்கிறது.


இது ஏதோ இப்போது பள்ளியில் படிப்பவர்களுக்கு மட்டும் பயன்படும் என்றில்லை, எட்டாம் வகுப்பு தமிழ் துனைப்பாடத்தில் உள்ள சில சிறு கதைகளை இப்போது படித்து பார்த்தபோது என் மனசுக்கும் கொஞ்சம் இதமாதான் இருந்தது.

KEYWORDS: Tamilnadu text books online, Free Tamilnadu text book, Tamilnadu text books pdf.

Monday, April 21, 2008

காக்க காக்க

Sunday, April 13, 2008

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Saturday, April 05, 2008

அன்புள்ள கோவி.கண்ணன் அவர்களுக்கு......

நீங்கள் இட்ட பின்னூட்டதிற்கு நான் அங்கேயே மறுமொழி கொடுத்திருக்க முடியும். நீங்கள் கொடுத்த சுட்டிகளை பொறுமையாக படித்தபோது, நிறைய சொல்லவேண்டும் என்று தோன்றியது, அதன் விளைவே இந்த பதிவு. நீங்கள் சுட்டிய உங்கள் பதிவுகள் அனைத்திலும் ஹிந்தியை எதிர்த்து உரக்க குரல் கொடுத்து இருக்கிறீர்கள். நன்றாக என்னுடைய இடுக்கையை இன்னொருமுறை படித்துப்பாருங்கள், நான் எந்த இடத்துலேயும் தமிழை வெறுக்கவும் இல்லை ஹிந்தி உட்பட எந்த மொழியையும் எதிர்க்கவுமில்லை. ஏன் அன்றாட வாழ்கையில் பின்பற்ற முடியாத போது எல்லா வார்த்தைகளையும் தமிழ் படுத்துகிறீர்கள் என்கிற ஒரு சிறு ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் அந்த இடுக்கை.

எறும்பு ஊர கல்லும் தேயும் என்பதைப்போல் இப்படி மொழிபெயர்ப்பத்தின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக அனைவரும் ஆங்கிலத்துக்கு மாற்றான அறிமுகப்படுத்தும் வார்த்தைகளை அறிந்துகொள்வார்கள் என்று சொல்லுகிறீர்கள். அன்றாட வாழ்கையில் நாம் பயன்படுத்தும் இரண்டு ஆங்கில வார்த்தைகளையும் அதற்கு நிகராக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தமிழ் வார்த்தைகளையும் எடுத்துகொள்வோம்.

ATM -- தா.ப.வ (தானியங்கி பணம் வழங்கி),
A/C Chair Car (Train) -- குளிர்சாதன நாற்காலி வகுப்பு.
நெஞ்சை தொட்டு சொல்லுங்கள், முதலில் நீங்கள் இந்த வார்த்தைகளைத்தான் உபயோகப்படுதுகிறீர்களா? அல்லது இந்த தமிழ் வார்த்தையை தமிழ்நாடு முழுவதும் அறிமுகப்படுத்தி வழக்கத்தில் கொண்டுவரமுடியும் என்று நம்புகிறீர்களா? சில வார்த்தைகளை அப்புடியே ஏற்றுக்கொள்ளுங்கள் அதனால் தமிழ் எந்த அளவும் பாதிக்கப்படாது என்று தான் சொன்னேன்.

சரி நீங்கள் சுட்டிக்காட்டிய உங்களுடைய இடுக்கைகளுக்கு வருகிறேன்.
தமிழ்நாட்டில் ஹிந்தி நுழைந்திருந்தால் என்ன நடக்கும் என்று நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள்
"சாருக்கான்களும், சல்மான்கான்களும் சென்னை வீதிகளில் போஸ்டர்களில் சிரிப்பார்கள், காங்கிரஸ் தலைவரோ, வாஜ்பாயோ வணக்கம் என்று தமிழில் தடுமாறிச் சொல்லி புழகாங்கிதம்
அடைய வேண்டி இருக்காது."
ஒரு மொழியை அனுமதித்தால் இதுதான் நடக்கும் என்று நீங்கள் சொல்லியிருப்பது எனக்கு விசித்தரமாக இருக்கிறது. ஒரு மொழியை கறப்பது என்பது அவர்களுடைய கலாச்சாரத்தை நாகரீகத்தை கற்பதற்கு சமம். ஒரு மொழியை வெறுத்து ஒதுக்குவது அம்மொழி பேசும் மக்களை மறைமுகமாக வெறுக்கிறோம் என்று அர்த்தம். அதைத்தான் இன்று கர்நாடகாவில் செய்துகொண்டு இருக்கிறார்கள்.
"இந்தி அறிந்தால் இந்தி சீரியல் / சினிமா பார்க்கலாம் என்ற பலனைத்தவிர மொழிவாரி மாநிலத்தவர் கண்ட பலன் வேறு எதுமில்லை" என்று சொல்கீறீர்கள்.
ஆங்கிலத்தில் Dan Brown எழுதிய Angels & Demons என்ற Novel படித்த போது, அந்த கதையில் எது கற்பனை எது நிஜ சம்பவம் என்று பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு அற்புதமாக இருக்கும். கிட்டத்தட்ட கல்கியின் பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன் படிக்கும் போது கிடைக்கும் உணர்வு இதை படிக்கும் போதும் எனக்கு கிடைத்தது. ஹிந்தியும் மலையாளமும் படித்திருந்தால் இன்னும் எவ்வளவு இலக்கியங்களையும் நல்ல புத்தகங்களையும் படித்திருக்க முடியும் என்று எனக்கு அடிக்கடி தோன்றும். பலன் என்பது அவரவர் பார்க்கும் விதத்தை பொருத்தது. உங்களுக்கு வேண்டுமானால் மொழி அறிவு என்பது சினிமா பார்க்க மட்டுமே உதவுவதாக இருக்கலாம் ஆனால் பலருக்கு அப்படியல்ல.

"மாநிலங்களின் மொழியை விழுங்கி ஏப்பமிடவும், புறக்கணிக்கவும் ஆயுதமாக பயன்படுத்திக் கொள்ளும் இந்தி மொழிக் கொள்கை என்ன வகையான தேசிய வாதம் ?" என்று கேட்டுள்ளீர்கள்.
நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பதை வைத்துதான் ஒரு மொழி ஒரு இடத்தில் வளரும். 10 மொழிகள் தெரிந்திருந்தால் கூட நீங்கள் உங்கள் தாய்மொழிக்குதான் முக்கியத்துவம் கொடுப்பீர்கள், அப்புடியிருக்கும் போது ஹிந்தியை அனுமதித்தால் அது தமிழை விழுங்கி ஏப்பம் விடும் என்பதெல்லாம் நடக்காத காரியம்.
"உமக்கு பிடிகிறதே என்பதற்காக நானும் மற்றும் என்னைப் போன்ற
பலரும் ஏன் அந்த வேண்டாத ஒன்றை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கவேண்டும் ?"
படித்தால்தானே அது வேண்டுமா வேண்டாமா என்கின்ற முடிவுக்கே வரமுடியும். படிக்காமலேயே வேண்டாம் என்பது சுவைக்காமலேயே கசக்கிறது என்று சொல்வது போல் இருக்கிறது. இந்தியாவில் அனைத்து மாநிலத்தில் உள்ளவர்களும் உங்களை போல் தன் தாய்மொழியை தவிர வேறு மொழியை வேண்டாம் என்று சொன்னால் என்னவாகும்? மொழியை வேண்டாம் என்று சொல்லுவதுதான் பிரிவினைக்கான முதல் படி. நீங்கள் ஹிந்தியை எதிர்ப்பது போல் இன்று கர்நாடகாவில் அவர்கள் தமிழை எதிர்கிறார்கள். பிரச்சனைக்கு மூல காரணமே இதுதான்.

நீதிமன்றத்திலே தீர்ப்புகள் தமிழில்தான் எழுதவேண்டும் என்று போராட்டம் நடந்த போது, கண்ணதாசன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டார்
"எந்த மொழிக்கும் இல்லாத ஒரு சுவை தமிழ்மொழிக்கு உண்டு, ஒரு வார்த்தையை பிரித்தால் ஒரு பொருள் தரும் சேர்த்தால் இன்னொரு பொருள் தரும். அப்படி இருக்கும் போது தீர்ப்பை எப்படி தமிழில் எழுத முடியும்? ஒரு நீதிபதி எழுதிய தீர்ப்பை என்னிடம் தாருங்கள்,
அதை மாற்றாமல் அதற்கு நேர் எதிர்மறையான பொருள் தரும்படி என்னால் வாசித்து காட்ட முடியும். ஆங்கிலேயர்களே சில முக்கியமான தீர்ப்புகளை french மொழியில் எழுதினார்களாம் காரணம் ஆங்கிலத்தை விட அந்த மொழியில்தான் ஒரு சொல் ஒரே பொருள்
தரும்."
என்று அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். ஆக கண்மூடித்தனமாக வேறு மொழிகளை எதிர்ப்பதை விட்டு, வரட்டு பிடிவாதத்தை தளர்த்தி வேற்று மொழிகளை சில இடங்களில் ஏற்றுக்கொள்வதில் தவறு இல்லை என்பது என்னுடைய எண்ணம்.

ப்ரியமுடன்,
ராஜா